இலங்கைகிரிக்கெட்முக்கிய செய்திகள்
டிரெண்டிங்

தென்னாப்பிரிக்காவிற்கு-எதிரான-தொடர்-தமிழக-வீரர்களுக்கு-வாய்ப்பு

இந்திய அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் அங்கு நடைபெறும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது ஆகிய 3 தொடர்களிலும் விளையாடவுள்ளது.

இந்த 3 தொடர்களிலும் விளையாடும் இந்திய குழாம் தொடர்பான விபரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நேற்று அறிவித்தது.

ரோகித் சர்மா தலைமையில் டெஸ்ட் குழாமும், கே. எல். ராகுல் தலைமையில் ஒருநாள் குழாமும் சூரிய குமார் யாதவ் தலைமையிலான இருபதுக்கு இருபது குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒருநாள் தொடர்களில் ஓய்வு கோரியதையடுத்து ரோகித் சர்மா மற்றும் விராட்கோலி ஆகியோர் டெஸ்ட் குழாமில் மாத்திரம் இணைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, ஸ்ரேயால் ஐயர் மற்றும் கே. எல். ராகுல் ஆகியோர் மீண்டும் டெஸ்ட் குழாமில் இணைந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: