இலங்கைமுக்கிய செய்திகள்
சுகாதார தொழிற்சங்கங்கங்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம்
மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற தொழிற்சங்க தலைமைத்துவ சபை கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி முதல் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பொருளாதார நீதியை அடைவதற்கு சுகாதார சங்கங்களுக்கு ழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்துள்ளதுடன் மேலும் தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ச்சியாக நாம் போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.