இலங்கைகொழும்புபிரபலமானவை

குணமடைந்த நிலையில் வீடு திரும்ப மறுக்கும் நோயாளிகள் மருத்துவதுறையில் பாரிய நெருக்கடி!!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பெருந்தொகையான நோயாளர்கள் வீட்டிற்கு அழைத்து செல்லப்படாமல் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியுள்ளதால் வைத்தியசாலையின் பணிகளைப் பேணுவது மிகவும் சிரமமாக உள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வை ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.

இதன் காரணமாக வைத்தியசாலை நிருவாகத்திற்கு அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், களுபோவில போதனா வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளிலும் இந்த நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று குணமடைந்த நோயாளர்களை வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், அந்த நோயாளர்கள் வைத்தியசாலையில் தங்கியிருப்பதால் வேறு ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், நிலைமை இன்னொரு நெருக்கடியை நோக்கிச் செல்லும். நோயாளிகள் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களைக் பாதுகாவலில் எடுக்க யாரும் முன்வருவதில்லை. இத்தகைய நோயாளிகளால் இந்த நெருக்கடி நீடித்தது.

சராசரியாக, வாரத்திற்கு ஐந்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்குச் செல்ல மருத்துவப் பரிந்துரைகளைப் பெறுகின்றனர். ஆனால் அதற்கு பாதுகாவலர்கள் முன்வர வேண்டும். சில நோயாளிகள் வீட்டிற்கு எப்படி செல்வது என்று கூட தெரியாது உள்ளனர். இந்த விவகாரத்தில் சமூக சேவைகள் மற்றும் நலத்துறை தலையிட வேண்டும் என்றார்..

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: