இலங்கைஇன்றைய செய்திகள்கொழும்புமுக்கிய செய்திகள்
கடந்த 24 மணித்தியாலங்களில் விபத்துக்களால் 162 பேர் சிகிச்சைக்காக அனுமதி
கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறுபட்ட விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் வீதி விபத்துக்கள் காரணமாக 37 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நேற்று(13) பட்டாசு விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மருத்துவர் ருக்ஷான் பெல்லன மேலும் தெரிவித்துள்ளார்.