உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது பாகிஸ்தான்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி இன்று வெளியேறியது. அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்து அணிக்கு எதிரான மேட்ச்சில் 338 ரன்கள் இலக்கை 6.2 ஓவர்களில் பாகிஸ்தான் அணி எடுக்க வேண்டும். இது நடந்தால் மட்டுமே 4 ஆம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியை பாகிஸ்தானால் நெட் ரன் ரேட்டில் பின்னுக்கு தள்ளி, அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
ஆனால் 6.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் 30 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரை விட்டு அந்த அணி வெளியேறியுள்ளது. அதே நேரம் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் வெற்றி பெற்று கண்ணியத்துடன் பாகிஸ்தான் வெளியேறுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் அல்லது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகக் குறைந்த ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் மட்டுமே, அந்த அணியால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழல் காணப்பட்டது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 337 ரன்கள் குவித்தது. இதனை 6.2 ஓவரில் பாகிஸ்தான் எடுத்தால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால் 6.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் 30 ரன்கள் மட்டுமே எடுத்ததால் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.