ஈரளகுளம் வேலோடும் மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் அன்னதான மண்டபம் திறந்து வைப்பு
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் ஏற்பாட்டில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஈரளகுளம் வேலோடும் மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் அன்னதான மண்டபமொன்று திறந்து வைக்கப்பட்டது.
வேலோடுமலை முருகன் ஆலயதர்மகர்த்தா எஸ். தியாகராஜா தலைமையில் நடைபெற்ற அன்னதானமண்டப திறப்பு விழாவில், ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீமகராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மண்டபத்தை திறந்து வைத்தார்.
லண்டனில் வாழும் திருமதி. ஜீவா தேவி வரதராஜன், காலஞ்சென்ற மயில்வாகனன் வரதராஜன் ஏவிஎஸ் அவர்களின் ஞாபகார்த்தமாக இந்த அன்னதான மண்டபத்தை ராமகிருஷ்ண மிஷன் வேண்டுகோளின்படி நிறுவியுள்ளனர்.
இந்த பணியில் இராமகிருஷ்ணமிஷன் தொண்டர் கருணாநிதி பொறுப்பேற்று முருகன் ஆலயத்தின் தலைவர் தியாகராஜாவின்ஒத்துழைப்போடு பணிகள் நிறைவேற்றப்பட்டன.
அன்னதான மையத்தோடு இணைந்து சமய நூல்கள் மற்றும் இராமகிருஷ்ண மிஷனால் வெளியிடப்பட்டுள்ள புத்தகங்களும் இதன்போது காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.