இலங்கைஇன்றைய செய்திகள்வட மாகாணம்
அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு திட்டங்களை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று(19) காலை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ். முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டத்தின் திணைக்களங்களின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.