நம் இலங்கைக் கலைஞர்களின் படைப்புகளில் அனேகமானவை நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பல கலைஞர்களின் கூட்டு முயற்சியில் வலியோடு போடு என்னும் தன்னம்பிக்கை தரும் பாடல் வெளியாகி வெற்றி நடை போடுகிறது.
இதனை பல சிறந்த திரைப்படங்கள் மற்றும் முழு நீள திரைப்படங்களை இயக்கியுள்ள கோடீஸ்வரன் அவர்களின் இயக்கத்தில் தினேஷ்குமாரின் இசை மற்றும் குரல் மலையக மண்ணின் பாடல் ஆசிரியர் ராம்கியின் வரிகள் மற்றும் கனுஷ்யனின் சொல்லிசை சாந்தியின் இசைக்கலவையில் உருவாகியுள்ள இந்தப் பாடல். பிரசாந்த், இம்ரான் ஹேந்திரன், அட்சயா, கிலசன், ருத்ரா, பிரபாகரன், சலோ, ஜனு, மகாதேவன், அகிலன், டிவானு, கபில், டிசா, ஸ்ரீதர், ரிஷி, சனோ,ஜெயசந்திரன், நில்லு என பல கலைஞர்கள் இணைந்து பங்கெடுத்துள்ளனர்.
இலங்கையின் பல இடங்களிலும் இருந்து கைகோர்த்த கவிஞர்களின் படைப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இளம் சமுதாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.
இப் பாடலை DTS Creation Youtube channel இல் பார்வையிடலாம்.