இலங்கை
போலி நாணயத் தாள்கள் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு
போலி நாணயத் தாள்களை காவல்துறையினரிடம் நபரொருவர் ஒப்படைத்துள்ளதாக தொடங்கொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, குறித்த நபர் நான்கு 5000 ரூபா போலி நாணயத்தாள்களை தொடங்கொட காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந் நபர் தொடங்கொட புஹபுகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சூதாட்ட மைதானத்தில் வைத்து இப் பணத்தைக் கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந் நாணயத்தாள்கள் போலியானவை என்று கண்டு பிடிக்கப்பட்டதும் உடனடியாக காவல்நிலையத்தில் அதனை ஒப்படைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
போலி நாணயத்தாள்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்த பின் அந்த நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.