இலங்கை

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு கோரிக்கை

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பாடசாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2024ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் இந்த நாட்களில் வயிற்றோட்டம் தொடர்பான நோயாளர்கள் பதிவாகி வருகின்றமையிலேயே பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு பாடசாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளமையால், அதற்கு முன்னர் உரிய பாடசாலைகளில் அதிபர்கள் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: