இலங்கை
தம்புள்ளை நகருக்குள் புகுந்த மூன்று காட்டு யானைகளால் அமைதியின்மை
தம்புள்ளை நகருக்குள் வந்த மூன்று காட்டு யானைகளினால் தம்புள்ளை நகரைச் சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களிடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்த மூன்று காட்டு யானைகளும் தம்புள்ளை நகருக்கு வந்து வீடுகள் மற்றும் கடைகளுக்கு சுற்றித் திரிவதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.
இந்நிலையில் நகரின் பாதுகாப்புக் கருதி சிகிரிய வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் தம்புள்ளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், காட்டு யானைகளை விரட்டுவதற்காக 24 மணித்தியாலங்கள் எடுக்கப்பட்டதாக தம்புள்ளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.