இலங்கை
கைது செய்யப்பட்ட புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதிக்கு விளக்கமறியல்
புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட போது இவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மே 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.