கிரிக்கெட்

உலகக்கோப்பையை அவர்தான் வென்று தருவார் – யுவராஜ் சிங் நம்பிக்கை

சூர்யகுமார் யாதவிற்கு முன்னாள் இந்திய வீரரான யுவராஜ் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய அணி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. மூன்று போட்டிகளிலும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேறிய சூர்யகுமார் யாதவ் மிக கடுமையான விமர்ச்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் இந்திய வீரரான யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் “எந்த ஒரு விளையாட்டு வீரனும் தங்களது கேரியரில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து தான் ஆக வேண்டும்.

யுவராஜ் ஆதரவு
எவ்வளவு சிறந்த வீரராக இருந்தாலும் சரிவுகளை சந்தித்து தான் ஆக வேண்டும். சூர்யகுமார் யாதவ் நிச்சயமாக இந்திய அணியின் மிக முக்கிய வீரராக திகழ்வார், எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் அவருக்கான வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக அவர் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுக்க கூடிய வீரராக இருப்பார். நமது சூர்யகுமார் யாதவ் நிச்சயம் மீண்டு வருவார்” என ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: