கிரிக்கெட்

இரண்டவாவது ரி-20 போட்டியிலும் வெற்றி: அயர்லாந்து அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது பங்களாதேஷ்!

அயர்லாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள பங்களாதேஷ் அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

சட்டோகிராம் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியின் போது, ஆரம்பத்திலே மழைக் குறுக்கிட்டதால், போட்டி 17 ஓவர்களாக மட்டுப்படுத்தபட்டது.

இதன்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து 203 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணியால், 17 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சகிப் அல் ஹசன் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி, நாளை சட்டோகிராம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: