கிரிக்கெட்விளையாட்டுச்செய்திகள்

மன்னிப்பு கடிதம் கொடுத்தும் ஏற்காத அகார்கர்.. இனி விளையாடவே முடியாதாம்.!

2023ஆம் ஆண்டில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், அணியைவிட்டு வெளியேறி கெத்துக் காட்டிய வீரரை, அஜித் அகார்கர் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷன், திடீரென்று நாடு திரும்பினார். அந்த டெஸ்ட் தொடருக்கு முன் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இஷான் கிஷன் கலந்துகொண்ட நிலையில், அவர் நாடு திரும்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து கிஷனுக்கு மாற்றாக கேஎஸ் பரம் சேர்க்கப்பட்டார். இருப்பினும், இவருக்கும் லெவன் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கே.எல்.ராகுல்தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இந்நிலையில், இஷான் கிஷன் நாடு திரும்பியது குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்தது.

இஷான் கிஷன் நாடு திரும்பியது குறித்து பேசிய பிசிசிஐ நிர்வாகி, ”இஷான் கிஷனுக்கு மனதளவில் பிரச்சினை இருக்கிறது. மன உறுதி சரியான நிலையில் இல்லை. இதனால்தான், பிசிசிஐயை அணுகி தன்னுடைய பிரச்சினையை எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து, இஷான் கிஷனை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கினோம். அவருக்கு லேசான தசை பிடிப்பு பிரச்சினையும் இருந்தது” எனக் கூறினார். இந்நிலையில், நாடு திரும்பிய இஷான் கிஷன், எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமல், குறிப்பாக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு செல்லாமல் ஊர் சுற்ற ஆரம்பித்தார். குறிப்பாக, ஒரு தனியார் தொலைக்காட்சியின் கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பது, கிஷன் உற்சாகமாக காணப்பட்டார். இதன்மூலம், இஷான் கிஷன் நல்ல நிலையில்தான் இருக்கிறார் என்பது தெளிவானது.

கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில், இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். ஆனால், அதன்பிறகு ரெகுலராக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. குறிப்பாக, 2023ஆம் ஆண்டில் மாற்று வீரராக மட்டுமே இஷான் கிஷன் இருந்தார். யாராவது காயத்தால் அவதிப்பட்டாலோ, அல்லது ஓய்வுக்கு சென்றாலோ மட்டுமே இஷான் கிஷனுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. குறிப்பாக, ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் கூட, முதல் இரண்டு போட்டிகளின்போது ஷுப்மன் கில் காய்ச்சல் காரணமாக விலகியபோது, கிஷன்தான் மாற்று ஓபனராக களமிறங்கினார். அதன்பிறகு வாய்ப்பு வழங்கப்பட்டவில்லை.

இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 3 போட்டிகளில் மட்டுமே இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், 2 அரை சதங்களை விளாசி அசத்தினார். இருப்பினும், அதன்பிறகு தென்னாப்பிரிக்க டி20 தொடரில் கிஷனை உட்கார வைத்துவிட்டு, ஜிதேஷ் ஷர்மாவை சேர்த்தார்கள். ஒருநாள் தொடரிலும் வாய்ப்பில்லை. அடுத்து, டெஸ்ட் தொடருக்கான அணியிலும் கே.எல்.ராகுல் விளையாடுவது உறுதியானதால், இஷான் கிஷனுக்கு இடம் கிடைக்காது என்ற நிலைமைதான் இருந்தது. இந்த அதிருப்தி காரணமாகத்தான், இஷான் கிஷன் டெஸ்ட் தொடரை புறக்கணித்து நாடு திரும்பியிருக்கிறார்.

இந்நிலையில், இஷான் கிஷன் பொய்சொல்லிவிட்டு நாடு திரும்பி, பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சை பெறாமல், ஊர் சுற்றி வந்தது தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். இதனால், இனி இஷான் கிஷனை படிப்படியாக ஓரங்கட்ட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, அஜித் அகார்கருக்கு இஷான் கிஷன் மன்னிப்பு கடிதம் எழுதியதாக கூறப்படும் நிலையில், அதனையும் அகார்கர் ஏற்கவே இல்லையாம். இதனால், எதிர்வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷனை சேர்க்க கூடாது என்ற முடிவில் அகார்கர் இருப்பதாகவும், பிசிசிஐ நிர்வாகிகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: