வவுனியா, போகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து சடலமாக மீட்கப்பட்டார்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கிணற்றில் ஒரு சடலம் மிதப்பதை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி க.கரிபிரசாத் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
வவுனியா, போகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த (30)வயது இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.