எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியில் காரைதீவு பிரதேச சபையின் மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளருக்காக வீட்டுக்கு வீடு பிரசாரம் செய்யும் நிகழ்வு இன்று (24) வியாழக்கிழமை மாளிகைக்காடு கிழக்கு வட்டார வேட்பாளர் பர்ஹான் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில், திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி குழு தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மாளிகைக்காடு பிரதேச செயற்பாட்டாளர் இர்ஷாட், காரைதீவு பிரதேச சபை வேட்பாளர்கள், பொது மக்கள் என பலரும் தமது கட்சியின் வெற்றிக்காக தேர்தல் பிரசாரப் பணிகளில் மும்முரமாக ஈடுப்பட்டனர்.

