தேசிய மட்ட மாற்று வலுவுள்ளோருக்கான விளையாட்டு நிகழ்வு

தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான போட்டியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மாவட்ட வீர வீராங்கனைகளை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
2025ம் ஆண்டுக்கான தேசிய மட்ட மாற்றுவலுவுள்ளோருக்கான விளையாட்டு நிகழ்வு கடந்த 03-04-2025 அன்று  ஹோமாகம மகிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்றது. 25மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாற்றுவலுவுள்ளோர் கலந்து கொண்டனர்.
குறித்த போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 21 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் 50 புள்ளிகளைப்பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது. குறித்த போட்டியில் 6 தங்கப் பதக்கதையும்  10வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.
43புள்ளிகளைப்பெற்று கம்பஹா மாவட்டம் இரண்டாம் இடத்தினையும் 36புள்ளிகளைப்பெற்று முல்லைத்தீவு மாவட்டம் மூன்றாம் இடத்தைப்பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த கெளரவிப்பு நிகழ்வில் மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன், மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாற்றுவலுவுள்ளோர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *