கச்சதீவு, இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் என இலங்கை செல்லும் பிரதமர் மோடிக்கு இது குறித்து அந்நாட்டு அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம்.
இது குறித்து அவர் பேசியதாக பெரிதளவில் செய்தி இல்லை இது வேதனை அளிக்கிறது.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்பகளை எடுத்துள்ளது.
இலங்கை சிறையில் உள்ள 97 மீனவர்களை விடுவிக்க பெரிய அளவில் நடவடிக்கை இல்லை பிரதமர் மோடியின் இலங்கை பயணம் எமக்கு ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழர் நலனுக்கு தொடர்பில்லாத பிரதமரின் இலங்கை பயணம் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டாலும் தமிழக அரசு மீனவர்களுக்கு துணை நிற்கும் என்று கூறினார்.