இலங்கைகிழக்கு மாகாணம்முக்கிய செய்திகள்

மட்டு நகரில் கமலா வாசுகியின் ஓவியக் கண்காட்சி!

பிரபல பெண்ணிலைவாதக் கலைச் செயற்பாட்டாளரான கமலா வாசுகியின் ஓவியங்களின் கண்காட்சி இம்மாதம் 05 ஆந் திகதி தொடக்கம் 10 ஆந் திகதி வரைக்கும் மட்டுநகர் இல 55 லேடிமனிங் டிறைவ் (கல்லடிப் பாலத்து இறக்கத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ள வாவிக்கரை வீதி) எனும் முகவரியிலுள்ள இல்லத்தில் மு.ப 09:00 மணி தொடக்கம் மாலை 05:00 மணி வரைக்கும் நடைபெறவுள்ளது.

ஒரு பெண்ணிலைவாதக் கலைச் செயற்பாட்டாளராகக் கடந்த மூன்று தசாப்த காலமாகத் தான் எதிர்கொண்ட அனுபவங்களை ஓவியக் கலையாக்கங்களுடாக வெளிக்காட்டும் கலைத் தொகுப்பாக இக்காட்சியை வாசுகி நடாத்தவுள்ளார்.

இதனால் இக்கண்காட்சியானது ‘கடந்து வந்த காலத்தைப் பார்த்தல்’ (1989 – 2023) எனும் பெயரில் நடைபெறவுள்ளது.

ஆர்வமுள்ளவர்கர்களை கலந்துகொள்ளுஅன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: