இலங்கைமுக்கிய செய்திகள்
ஜனாதிபதியிடம் செல்வம் எம்.பி முன்வைத்துள்ள கேள்வி !!
இன பிரச்சினைக்கு இவ்வருடத்துக்குள் தீர்வு காணப்போவதாக மீண்டும் ஜனாதிபதி அறிவிக்கத் தொடங்கி இருக்கிறார். எங்களை பொறுத்தவரையில் தீர்வு என்பது எப்படிக் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகத் தான் இருக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு கிழக்கிலே தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுகின்ற வேலை தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது.
அது புத்தசாசன அமைச்சாக இருக்கலாம், வனவள திணைக்களமாக இருக்கலாம், வன ஜீவராசிகள் திணைக்களமாக இருக்கலாம், இப்படி திணைக்களங்களிடம் அதிகாரங்களைக் கொடுத்துவிட்டு இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்பது எப்படி சாத்தியமாகும்.