முக்கிய செய்திகள்
டிரெண்டிங்

மட்டக்களப்பில் இரு வெவ்வேறு சம்பவங்களில்  34 இலட்சம் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது

மட்டக்களப்பில் தனியார் வங்கி ஒன்றில் 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்த வங்கியில் கடமையாற்றிய ஒருவரும் மற்றும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக 16 இலட்சம் ரூபாவை மோசடி செய்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினரும் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு தனியார் வங்கி ஒன்றில் கடமையற்றி வந்த வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவர் வங்கியில் கடன் பெற்றவர்கள் மாதாந்தம் வங்கிக்கு செலுத்தும் கடன் கொடுப்பனவான பணத்தை அவர்களின் வீடுகளுக்கு சென்று அறவீடு செய்து வந்துள்ளார்.

இவர் வங்கி கடனை அறவீடு செய்த பணத்தை வங்கிக்கு செலுத்தாமல் 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்து வந்துள்ளமை அம்பலமாகியதைத் தொடர்ந்து வங்கி நிர்வாகத்தினர் அவருக்கு எதிராக மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து குறித்த நபர் தொடர்ந்து தலைமறைவாகி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை திக்கோடை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம் பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து அவரிடம் 16 இலட்சம் ரூபாவை மோசடி செய்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினரும் கிராம அபிவிருத்திச் சங்க தலைவரான இளைஞன் ஒருவரும் அவரின் அயல் வீட்டுக்கார நண்பன் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த இரு வெவ்வேறு கொள்ளைச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை நீதிமன்ற நிதிபதி பிணையில் விடுவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: