முக்கிய செய்திகள்
பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது!

பாதுக்க துன்னான பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாராம்மல பகுதியில் இருந்து பாடசாலை மாணவர்களுடன் ஹோமாகம நோக்கி பயணித்த பேருந்து ஒன்பறுடன் பின்னால் வருகை தந்த பேருந்து மோதுண்டமையினால் இந்த அர்த்தம் நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 21 பேரும் ஆசிரியை ஒருவரும் காயமடைந்த நிலையில் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.
