இலங்கை

திருட்டு சம்பவம் தொடர்பிலான சந்தேகத்தில் தம்பதியினர் கைது

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்வத்த பகுதியில் வீடொன்றில் நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் தம்பதிகள் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண்ணும் 33 வயதுடைய அவரது கணவரும் ஆவர்.

சந்தேக நபர் தனது கணவருடன் தகராறு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவரிடம் கூறி நட்பாக பழகி அவரது வீட்டின் மேல் அறையில் வசித்து வந்த நிலையில் அவர் வீட்டில் இல்லாத வேளையில் கணவருடன் இணைந்து 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை திருடி தப்பிச்சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து இருவரும் சந்தேகத்தின் பேரில் பொலிசாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: