முக்கிய செய்திகள்
டிரெண்டிங்

ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது, இதனை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதி செய்துள்ளார்

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் படோடி – கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென 300 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்து பள்ளத்தில் உருண்டு கீழே விழுந்ததில், அதில் இருந்த 36 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர அவர்கள் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், “JK02CN-6555 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து 55 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்து ட்ரங்கல் – அஸ்ஸார் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: