இலங்கைமுக்கிய செய்திகள்

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!!

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகம் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீனாவினால் வழங்கப்பட்ட சீருடை துணி விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை உள்ளூர் விநியோகஸ்தர்களால் வழங்கப்பட்ட 3,831,000 மீட்டர் சீருடை துணியில் 3,561,000 மீட்டர் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27,000 மீட்டர் சீருடை துணி காலி, களுத்துறை மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் இறுதிக் கட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை சீருடைக்கான தேவை 12,694,000மீட்டர் எனவும், 4.2 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் மாணவர் பிக்குகளுக்கு இது விநியோகிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: