முக்கிய செய்திகள்

இன்று நள்ளிரவு எரிபொருள் விலை குறைப்பு!

இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று (29.03.2023) இரவு முதல் சிபெட்கோவின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 340 ரூபா.

95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 375 ரூபா.

அத்தோடு, ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் 80 ரூபாவினால் குறைக்கப்படுவதோடு, புதிய விலை 325 ரூபா.

ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை ரூபாவினால் 45 குறைக்கப்படுவதோடு, புதிய விலை 465 ரூபா. 

மண்ணெண்ணெய் விலையானது 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலை 295 ரூபா.

மேலும் காட்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இதைப் படித்தீர்களா?
Close
Back to top button
error: