முக்கிய செய்திகள்
ஆனையிறவு பகுதியில் இளைஞர் ஒருவர் கைது

இராணுவ புலனாய்வு பிரிவினரால் கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை இன்று மாலை கைது செய்துள்ளனர்.
வவுனியாவைச்சேர்ந்த இளைஞரையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் வடமராட்சி உடுத்துறை பகுதியில் இருந்து கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஆனையிறவு பகுதியில் வைத்து சோதனையிட்ட போது மோட்டார் சைக்கிளுடன் 390 கிராம் கஞ்சா போதைபொருளை இவர் கொண்டு சென்றமை கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
