இந்தியச்செய்திகள்கோலிவுட்சினிமா

வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு நடிகர் சூர்யா நிதி நிவாரணம்.

சென்னை உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் பெய்த கன மழை மற்றும் நிக்ஜாம் புயலின் தாக்கத்தால் இன்றளவும் ஒரு சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

ஆகவே அரசோடு இணைந்து பல தன்னார்வலர்களும் வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நிக்ஜாம் புயல் கரையை கடந்து விட்டது என்றாலும் கூட, சுமார் ஐந்து நாட்கள் ஆகியும் இன்னும் சென்னையின் சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

உணவு இன்றி பல நூறு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர், இந்நிலையில் இவர்களுக்கு உதவ மருத்துவ முகாம்களும், உணவு பொட்டலங்களும் மற்றும் அடிப்படை தேவைகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி நடிகர் கார்த்தி ஆகியோர் இணைந்து முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: