100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் சவுக்கடி பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.!!
100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்டத்தில் சவுக்கடி பிரதேசத்தில் இன்று நடைபெற்றது.
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் அறுபத்தொன்பதாம் நாள் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் சவுக்கடி பிரதேசத்தில் 08.10.2022 இன்று இடம்பெற்றது.
இப் போராட்டமானது சவுக்கடி கிராம கடற்கரையில் மக்கள் ஒன்றிணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும். எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, இல்மனைட் அகழாதே என்று பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது கிராம மக்கள் தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளான மீன்பிடியை ஜீவனோபாயம தொழிலாக கொண்ட மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்காமை, பொருளாதார நெருக்கடியில் எதிர்கொண்டுள்ள விலவாசி ஏற்றம் மற்றும் தமிழ் மக்களுக்கு தீர்க்கமான அரசியல் தீர்வு வழங்காமை உள்ளிட்ட தமது பிரச்சனைகள் தொடர்பாக தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் சவுக்கடி கிராம மீனவர்கள்,பெண்கள் அமைப்பினர், இளைஞர்கள்,பிரதேச அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.













