மட்டக்களப்பு கல்லடி வேளாங்கண்ணி ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!!
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பகுதியில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயமான அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது.
கடந்த (8) திகதி ஆலய பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை திருச்செபமாலையும் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டு, கடந்த சனிக்கிழமை மாலை அன்னையின் திருவுருவ பவனி இடம்பெற்றதனைத் தொடர்ந்து விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து (11) திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கொடியிறக்கத்துடன் இவ்வாண்டிற்கான ஆலய திருவிழா இனிதே நிறைவடைந்துள்ளது.





